செய்திகள்
மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
செங்கோட்டை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தென்காசி:
செங்கோட்டை அருகே புளியரையை அடுத்த தெற்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித் (வயது 19). கூலி தொழிலாளி. இவர் 16 வயதான பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில், ரஞ்சித் மீது தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.