செய்திகள்
தற்கொலை

தலைவாசல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-09-21 12:11 GMT   |   Update On 2020-09-21 12:11 GMT
தலைவாசல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தலைவாசல்:

தலைவாசல் அருகே நாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. இவருடைய மனைவி செல்வமணி (வயது 26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் செல்வமணி கடந்த 19-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று செல்வமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெண்ணின் தாய் பூங்கொடி வீரகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் பெண் இறந்திருப்பதால் ஆத்தூர் உதவி கலெக்டர் துரை விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பெண் அடிக்கடி வலிப்பு நோயால் அவதிப்பட்டு இருந்ததாகவும், இதனால் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News