செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 7,010 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 10 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 2,398 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 163 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது. 148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,760 பேர் சிகிச்சையில் உள்ளனர். 644 பேர் நேற்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 14 நாட்கள் கண்காணிப்பு முடிந்து நேற்று ஆயிரத்து 372 பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி மொத்தம் 7 ஆயிரத்து 10 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 2,398 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.