செய்திகள்
கோப்புபடம்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் - கணவர் கைது

Published On 2020-09-18 13:57 GMT   |   Update On 2020-09-18 13:57 GMT
நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கலைநகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 30). இவருடைய மனைவி அர்ச்சனா (26). இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அர்ச்சனா அவரது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று திலீப்குமார் அவருடைய சகோதரர் தினேஷ்குமாருடன் அர்ச்சனா வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டியதாகவும், வீட்டில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் அர்ச்சனா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விசாரணை தொடர்பாக அர்ச்சனா புன்னைநகரில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது திருப்பத்தில் வைத்து அர்ச்சனாவை தடுத்து நிறுத்தி திலீப்குமார் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் அர்ச்சனா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை கைது 
செய்தனர்.
Tags:    

Similar News