செய்திகள்
கைது

சிறுமியை கடத்தி கட்டாய திருமணம்- வாலிபர் கைது

Published On 2020-09-16 09:10 GMT   |   Update On 2020-09-16 09:10 GMT
விழுப்புரம் அருகே சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செஞ்சி:

விழுப்புரம் அருகே பொன்னங்குப்பம் ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மகன் தினேஷ் (வயது 19). இவர் அகரம் சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 

இது குறித்து சிறுமியின் தந்தை செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News