செய்திகள்
ராணிப்பேட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ராணிப்பேட்டையில் கொரோனாவுக்கு தாய் பாதிக்கப்பட்டதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை)
ராணிப்பேட்டை காரை அப்பாதுரை பிள்ளை தெருவை சேர்ந்தவர் எஸ்தர் செலினா (வயது 17). இவரது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்படவே ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மனமுடைந்த எஸ்தர் செலினா நேற்று வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.