செய்திகள்
அண்ணாமலை

விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் - அண்ணாமலை டுவிட்

Published On 2020-08-30 13:44 GMT   |   Update On 2020-08-30 13:44 GMT
என்னை பற்றி நூல் வெளியிடுகிறேன், எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளுங்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தமிழக பா.ஜ.க. துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் சேர்ந்த 5-வது நாளிலேயே அவருக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது.

இந்நிலையில், விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் என்று பாஜக துணை தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதுதான் ஐபிஎஸ் தேர்வில் வெற்று பெற்று பொறுப்புக்கு வந்தேன்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ்தான் பணியாற்றினேன். பாஜக ஆட்சியின் கீழ் 4 நாட்கள்தான் பணியாற்றினேன். எனது கடந்த கால சாதனைகளைப்பற்றி நான் பேசவில்லை எனினும், அது குறித்து வரும் தகவல்களைப்பற்றி சொல்ல விரைவில் எனது வாழ்க்கை புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News