செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

வசந்தகுமார் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் அஞ்சலி

Published On 2020-08-29 06:16 GMT   |   Update On 2020-08-29 06:16 GMT
சென்னை காமராஜர் அரங்கத்தில் வசந்தகுமார் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.

வசந்தகுமார் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு தி நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது.

சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வசந்த் & கோ நிறுவன ஊழியர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து வசந்தகுமாரின் உடலை உடனடியாக ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பியதால், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு வெளியே காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  காமராஜர் அரங்கத்தில் எச்.வசந்தகுமார் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து வசந்தகுமாரின் உடல் சாலைமார்க்கமாக அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
Tags:    

Similar News