செய்திகள்
பரமத்திவேலூரில் லாரி மோதி முதியவர் பலி- டிரைவர் கைது
பரமத்திவேலூரில் நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நடந்து சென்ற முதியவர் மீது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி ஒன்று மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கச்சிராயிருப்பு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் காந்தியை (வயது 31) கைது செய்தனர். மேலும் விபத்தில் இறந்தவர் சந்தன நிறத்தில் சட்டையும், நீல நிறத்தில் கட்டம் போட்ட வேட்டியும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.