செய்திகள்
தந்தை கொரோனாவால் இறந்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வில்லாபுரத்தில் தந்தை கொரோனாவால்இறந்ததால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்புச்செல்வி (வயது 34). கணவர் இறந்து விட்டதால் இவர் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இனி தனக்கு யாரும் இல்லை என்று அன்புச்செல்வி மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் அவர் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.