செய்திகள்
கொரோனா வைரஸ்

வாணியம்பாடியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2020-08-12 08:38 GMT   |   Update On 2020-08-12 08:38 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி 11-வது வார்டில் நேரு தெருவில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் நடந்தது. இம்முகாமில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலமாக பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் முகாமிற்கு வந்த அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது. முகாமில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சென்னகிருஷ்ணன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் இருந்தனர்.
Tags:    

Similar News