செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

தமிழகத்தில் மார்ச் முதல் இதுவரை 1,80,571 பிரசவங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-08-11 13:00 GMT   |   Update On 2020-08-11 13:00 GMT
தமிழகத்தில் 2020 மார்ச் முதல் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 571 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்திலும் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று அல்லாத நோயாளிகளுக்கும் எவ்வித தங்கு தடையின்றி அவசரகால மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் மார்ச் 2020 முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 கோடியே 9 லட்சத்து 2,183 நபர்கள் புறநோயாளிகளாகவும் 27 லட்சத்து 30 ஆயிரத்து 864 நபர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 571 பிரசவங்களும் 68 ஆயிரத்து 479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் 126 ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சை சேவை மையங்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 206 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 33 ஆயிரத்து 374 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் இதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் தனியார் மருத்துவமனைகளின் பளுவையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அர்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் சேவைகள் வழங்கப்பட்டதால் புற நேயாளிகள் மற்றும் பிரசவங்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் உயர்ந்துள்ளன.

தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் மக்கள் நலன் காக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News