செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நெல்லை மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-09 05:58 GMT   |   Update On 2020-08-09 05:58 GMT
நெல்லை மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,548 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 6,425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,548-ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News