செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னையில் 11,606 பேருக்கு கொரோனா சிகிச்சை- மாநகராட்சி

Published On 2020-08-08 06:24 GMT   |   Update On 2020-08-08 06:24 GMT
சென்னையில் கொரோனா உறுதியான 1,07,109 பேரில் 11,606 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 5,880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை மொத்தம் 2,27,575 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா உறுதியான 1,07,109 பேரில் 11,606 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,272 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 93,231 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் 12,206 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 58.99% ஆண்கள், 41.01% பெண்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,419 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:

கோடம்பாக்கம்-1,347
அண்ணாநகர் - 1,263
திரு.வி.க.நகர் - 826
தண்டையார்பேட்டை - 606
தேனாம்பேட்டை - 787
வளசரவாக்கம் -827
திருவொற்றியூர் -410
மணலி - 78
மாதவரம் - 534
ராயபுரம் - 806
ஆலந்தூர் - 544
அடையாறு - 904
பெருங்குடி - 538
அம்பத்தூர் - 1,419
சோழிங்கநல்லூர் -450 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags:    

Similar News