செய்திகள்
வருத்தத்துடன் பாஜகவில் இருந்தாலும் கட்சி மாறப்போவதில்லை- நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைமை மீது வருத்தத்தில் இருப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
தமிழக பாஜக தலைமை மீது வருத்தத்தில் இருக்கிறேன். வருத்தம் இருந்தாலும் பாஜகவை விட்டு செல்ல மாட்டேன். நம்பிக்கையோடு பாஜகவுக்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
தமிழக பாஜக தலைமை மீது வருத்தத்தில் இருக்கிறேன். வருத்தம் இருந்தாலும் பாஜகவை விட்டு செல்ல மாட்டேன். நம்பிக்கையோடு பாஜகவுக்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.