செய்திகள்
போளூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த 859 பேர் மீது வழக்குப்பதிவு
போளூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த 859 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று முன்தினம் வரை போளூருக்கு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து 993 பேர் வந்து உள்ளனர். அவர்களில் 134 பேர் மட்டுமே இ-பாஸ் பெற்று வந்து உள்ளனர். மீதமுள்ள 859 பேர் இ-பாஸ் இல்லாமல் போளூர் வந்து உள்ளனர். அவர்கள் மீது தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.