செய்திகள்
தற்கொலை

பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-07-31 10:40 GMT   |   Update On 2020-07-31 10:40 GMT
வில்லுக்குறி அருகே பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகியமண்டபம்:

வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்பால் (வயது 37). இவருடைய மனைவி வனஜாரோஸ் (33). கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாததால், ஜாண்பாலின் தம்பி பிள்ளைகளை அவர்கள் வளர்த்து வந்துள்ளனர். வனஜாரோஸ் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜாண்பால் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வனஜாரோஸ் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். உடனே ஜாண்பால், எதற்காக வாந்தி எடுக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு, வீட்டில் வைத்திருந்த தென்னை மரத்துக்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாண்பால், மனைவி வனஜாரோசை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு டாக்டர் இல்லாததால் சிகிச்சை அளிக்கவில்லை. பின்னர் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வனஜாரோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆசிரியையின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிக்கூட ஆசிரியை விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News