செய்திகள்
கைது

ஊரடங்கை மீறியதாக 104 பேர் கைது

Published On 2020-07-28 08:21 GMT   |   Update On 2020-07-28 08:21 GMT
கோவை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 104 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கோவையில் 36 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி உரிய காரணங்கள் இன்றி வெளியே சுற்றியதாக கோவை மாநகரில் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். புறநகரில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 97 பேர் கைதானார்கள். அதன்படி கோவை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 104 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News