செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் அறிவிப்பு

Published On 2020-07-28 08:20 GMT   |   Update On 2020-07-28 08:20 GMT
ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சை, திருவள்ளூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது.

தெற்கு வங்க கடல், குமரிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News