செய்திகள்
ஆர்ப்பாட்டம்

ஊத்துக்குளி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-25 11:52 GMT   |   Update On 2020-07-25 11:52 GMT
ஊத்துக்குளி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், காடபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக பால் கொள்முதல் செய்வதில் 20 சதவீதம் பால் உற்பத்தியாளர்களிடம் திருப்பி அனுப்பும் நிர்வாகத்தை கண்டித்து சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி, செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் ஜி.கே.கேசவன், சின்னக்கண்ணு, ஈஸ்வரன், சங்க உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
Tags:    

Similar News