செய்திகள்
கைது

ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

Published On 2020-07-25 10:46 GMT   |   Update On 2020-07-25 10:46 GMT
ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை பாலாறுக்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் ராணிப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது, மூட்டை கட்டி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும், அந்த நபர் ராணிப்பேட்டை சீனிவாசன்பேட்டை புதிய அம்பேத்கர் நகரை சேர்ந்த கேசவன் (வயது 22) என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து கேசவனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News