செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
திருத்துறைப்பூண்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் லட்சுமணன் (வயது 25). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 13 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி, ஏட்டு ராஜம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.