செய்திகள்
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சின்னமணி நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் யோகபிரகாஷ்(வயது 23). பெயிண்டர். இவர் சிலோன்காலனியில் உள்ள மாநகராட்சி கழிப்பறை அருகே வைத்து கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விரைந்து சென்று யோகபிரகாசை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ஒரு கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.