செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கீழடி அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2020-07-19 11:25 GMT   |   Update On 2020-07-19 11:25 GMT
கீழடியில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை:

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:

கீழடியில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.12.25 கோடியில் உலகத்தரமிக்க அருங்காட்சியகம் கீழடியில் அமைக்கப்படுகிறது

தொல்லியல் ஆய்வு மூலம் தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News