செய்திகள்
தற்கொலை

பிளஸ்-2 தேர்வில் தோல்வி: மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-07-18 07:57 GMT   |   Update On 2020-07-18 07:57 GMT
பர்கூர் அருகே பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

பர்கூர் அடுத்த கொங்கன் தெருவை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 17). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவன் தமிழ்செல்வன் தோல்வியடைந்தான். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News