செய்திகள்
தற்கொலை

திருவட்டார் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-07-14 13:30 GMT   |   Update On 2020-07-14 13:30 GMT
திருவட்டார் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார்:

திருவட்டார் அருகே பாரதப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கங்காதரன்(வயது 70). இவருக்கு புஷ்பம்(65) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். கங்காதரனின் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் அவரது பெற்றோரின் கல்லறை உள்ளது.

அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில் (40). இவருக்கு சொந்தமான இடம் கங்காதரனின் பெற்றோர் கல்லறையின் அருகில் உள்ளது. சம்பவத்தன்று செந்தில் அந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் எடுத்தார். அப்போது கல்லறை பகுதி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தோட்டத்துக்கு சென்ற கங்காதரன் கல்லறை சேதம் அடைந்துள்ளதை கண்டார். இதனால், மனமுடைந்த கங்காதரன் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அனுமதியின்றி மணல் அள்ளியதாக செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News