செய்திகள்
காதலர்கள் - கோப்புப்படம்

இ-பாஸ் இல்லாமல் காதலியுடன் சுற்றிய வாலிபர்

Published On 2020-07-11 07:35 GMT   |   Update On 2020-07-11 07:35 GMT
இ-பாஸ் இல்லாமல் காதலியுடன் சுற்றிய வாலிபர் கொரோனா தனிமைப்படுத்தப்படும் சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை:

கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த வாலிபர் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவார். அப்போது கிரிவலப்பாதையில் திருவண்ணாமலையை சேர்ந்த இளம்பெண்ணை சந்தித்து பேசினார். தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 4 மாதங்களாக காதலியை சந்திக்க முடியாமல் தவித்த அந்த வாலிபர் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து புறப்பட்டு வழியில் உள்ள சோதனைச்சாவடிகளை கடந்து மோட்டார்சைக்கிளில் திருவண்ணாமலைக்கு வந்தார்.

பின்னர் அவர் தனது காதலியை அழைத்துக்கொண்டு கடந்த 2 நாட்களாக நகர பகுதியில் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்துள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரையும், இளம்பெண்ணையும் போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் திருவண்ணாமலையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்படும் சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News