செய்திகள்
சூதாட்டம் கைது

பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

Published On 2020-07-10 07:58 GMT   |   Update On 2020-07-10 07:58 GMT
ஓசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் டவுன் போலீசார் ஜலகண்டேஸ்வரர் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய இமாம்பாடா கவுஸ் (வயது 39), ராம்நகர் நசீம் (46), முகமது (39), திருப்பதி (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர் டவுன் போலீசார் ராம்நகர் நூலகம் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ராம் நகர் நூருல்லா (39), மகேஷ் (25), ஜமீர் (40), முபாரக் (35), வெங்கட்ராமன் (61) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News