செய்திகள்
கொரோனா அறிகுறியுடன் இருந்த கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தொற்று இல்லை
கொரோனா அறிகுறியுடன் இருந்த கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தொற்று இல்லை என்று திருவாரூர் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த ஆண், பெண்களுக்கு என தனித்தனியே வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 19 கர்ப்பிணிகளும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 7 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இவர்களில் 5 பேருக்கு அறுவை சிகிச்சையும், 2 பேருக்கு சுகப்பிரசவமும் நடந்துள்ளது. இந்த 7 குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏதுமில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனையடுத்து 3 தாய்மார்கள், தங்களது குழந்தையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தகவலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு தலைமை டாக்டர் பிரபா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த ஆண், பெண்களுக்கு என தனித்தனியே வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 19 கர்ப்பிணிகளும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 7 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இவர்களில் 5 பேருக்கு அறுவை சிகிச்சையும், 2 பேருக்கு சுகப்பிரசவமும் நடந்துள்ளது. இந்த 7 குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏதுமில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனையடுத்து 3 தாய்மார்கள், தங்களது குழந்தையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தகவலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு தலைமை டாக்டர் பிரபா தெரிவித்துள்ளார்.