செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 174 பேருக்கு கொரோனா

Published On 2020-07-04 08:55 GMT   |   Update On 2020-07-04 08:55 GMT
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,120 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 53 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 266 ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News