செய்திகள்
விபத்து பலி

சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதி பலி

Published On 2020-07-01 06:34 GMT   |   Update On 2020-07-01 06:34 GMT
சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News