செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா

Published On 2020-06-30 07:34 GMT   |   Update On 2020-06-30 07:34 GMT
சேலத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியானது.

பின்னர் நடந்த பரிசோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த மேலும் 58 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News