செய்திகள்
விபத்து பலி

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் முதியவர் பலி

Published On 2020-06-28 08:57 GMT   |   Update On 2020-06-28 08:57 GMT
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (வயது 65). இவர் மொபட்டில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மலைச்சந்து பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் சறுக்கி கீழே விழுந்ததில் சின்னகண்ணு படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னகண்ணு இறந்தார்.

இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News