செய்திகள்
தற்கொலை

தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-06-27 15:09 GMT   |   Update On 2020-06-27 15:09 GMT
திங்கள்சந்தை அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகியமண்டபம்:

திங்கள்சந்தை அருகே வடக்கு பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று விஜயகுமார் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். அதற்கு, பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த விஜயகுமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து விஜயகுமாரின் மகன் விவேக் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News