செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்

Published On 2020-06-23 12:01 GMT   |   Update On 2020-06-23 12:01 GMT
கம்பத்தில் முககவசம் அணியாத 50 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
கம்பம்:

கம்பம் நகராட்சி கமிஷனர் கமலா தலைமையில் மேலாளர் முனிராஜ், சுகாதார அலுவலர் அரசக்குமார், வருவாய் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கம்பம் பார்க்ரோடு, வேலப்பர்கோவில் தெரு, அரசமரம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள சில கடைகளில், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்திருந்தனர். இதையடுத்து முககவசம் அணியாத 50 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News