செய்திகள்
முதியவர் தற்கொலை

பாடாலூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2020-06-23 07:11 GMT   |   Update On 2020-06-23 07:11 GMT
பாடாலூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி(வயது 77). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சஞ்சீவி நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News