செய்திகள்
கைது

பல்லடத்தில் சூதாடிய 5 பேர் கைது

Published On 2020-06-22 14:52 GMT   |   Update On 2020-06-22 14:52 GMT
பல்லடத்தில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி புள்ளியப்பன்பாளையத்தில் பணம் வைத்து சூதாடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புள்ளியப்பன்பாளையம் வடக்குக்குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வடிவேல், சுப்பிரமணி, தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகளையும் ரொக்கம் ரூ.1500-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News