செய்திகள்
தற்கொலை

நாகர்கோவிலில் 22 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் ‘திடீர்’ தற்கொலை

Published On 2020-06-22 10:54 GMT   |   Update On 2020-06-22 10:54 GMT
கொலை வழக்குகளில் கைதாகி 22 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தவர் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:

தக்கலை அருகே மேக்கமண்டபம், ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் சாலமன் (வயது 50), தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் மீது கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் இருந்தது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 22 ஆண்டுகள் பாளையங்கோட்டை ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார்.

தண்டனை காலம் முடிந்து சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அதன்பின்பு நாகர்கோவில் பகுதியில் சுற்றி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சாலமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News