செய்திகள்
தற்கொலை

தேனி அருகே முதியவர் தற்கொலை

Published On 2020-06-17 14:22 GMT   |   Update On 2020-06-17 14:22 GMT
தேனி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் வைரசாமி (வயது 67). இவருடைய மனைவி ஈஸ்வரி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். இதை பார்த்த வைரசாமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வைரசாமி விஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News