செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-06-16 07:09 GMT   |   Update On 2020-06-16 07:09 GMT
சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில், லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல், மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் வருகிற ஜூன் 20-ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News