செய்திகள்
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன- அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அதிகாரிகளுடன் 5 அமைச்சர்கள் அடங்கிய குழு ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
டிவி நடிகர், பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார். பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியுடன் அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்பக் கூடாது. ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அதிகாரிகளுடன் 5 அமைச்சர்கள் அடங்கிய குழு ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
டிவி நடிகர், பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார். பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியுடன் அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்பக் கூடாது. ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.