செய்திகள்
அபராதம்

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்கள் பறிமுதல்

Published On 2020-06-06 08:37 GMT   |   Update On 2020-06-06 08:37 GMT
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இங்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை ஏனோ தானோ வென்று விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை கண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்களை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்பேரில் போக்கு வரத்து போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் போக்குவரத்துக்கு இடையூராக நின்ற வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News