செய்திகள்
கைது

கோவையில் விபசாரம்- பெண் உள்பட 2 புரோக்கர்கள் கைது

Published On 2020-06-03 13:36 GMT   |   Update On 2020-06-03 13:36 GMT
கோவையில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய பெண் உள்பட 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை பீளமேடு போலீசாருக்கு கணபதியில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் மசாஜ் சென்டருக்கு சென்றனர். அப்போது அங்கு 2 அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது.

மசாஜ் சென்டரில் இருந்த அக்ஷை என்பவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவருடன் சேர்ந்து புஷ்பா, பாலாஜி, விஷ்ணு ஆகியோர் கேரளாவில் இருந்து 22 வயது அழகியையும், கோவையை சேர்ந்த 23 வயது அழகியையும் மசாஜ் சென்டரில் வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அக்ஷையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அக்ஷையுடன் சேர்ந்து விபசாரம் நடத்தி வந்த புஷ்பா, பாலாஜி, விஷ்ணு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் கோவில்பாளையம் போலீசாருக்கு சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சாதாரண உடையில் சென்ற போலீசார் சாலையோரம் ஒரு பெண் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை பார்த்தனர். அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சென்னையைச் சேர்ந்த சாந்தி என்பதும் அவருடன் சேர்ந்து ஜான் வில்லியம்ஸ், வேணி ஆகியோர் சேர்ந்து ஆந்திர, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இருந்து அழகிகளை அழைத்து வந்து விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் விபசாரத்துக்கு பயன்படுத்திய 3 அழகிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய ஜான் வில்லியம்ஸ், வேணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News