search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோக்கர்கள் கைது"

    • போலீஸ் விசாரணையில் கடந்த 1½ வருடமாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிபு மற்றும் சிஜோவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் வேலை விஷயமாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார்.

    ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அவர் அருகே வந்த ஒரு வாலிபர் தான் கேரளாவை சேர்ந்தவர் என்றும் தனது பெயர் ஜிபு (26) என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

    மோளகவுண்டன் பாளையம் பாலதண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், அங்கு வெளி மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் இருப்பதாகவும், ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார்.

    அதற்கு அந்த வாலிபர் சரி என்று ஒப்புக்கொண்டு ஜிபு கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அந்த மசாஜ் சென்டரில் இருந்த கேரளாவை சேர்ந்த சிஜோ (25) என்பவர் 3 பெண்களை காண்பித்து இதில் உங்களுக்கு யாரை பிடித்து இருக்கிறதோ சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வேறு அறைக்கு சென்று விட்டார். அந்த வாலிபர் 3 பெண்களிடம் அவர்களது பெயரை கேட்டு உள்ளார்.

    அப்போது அந்த பெண்கள் தாங்கள் அரியானா, டெல்லி மற்றும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும், மசாஜ் செய்யும் வேலை என்று சொல்லி அழைத்து வந்து தங்களை ஜிபு, சிஜோ ஆகியோர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் தங்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்து சென்று விடுங்கள் என்று அந்த பெண்கள் அந்த வாலிபரிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து அந்த வாலிபர் தன்னிடம் பணம் குறைவாக இருப்பதாகவும் ஏ.டி.எம்.மில் சென்று பணம் எடுத்து வருவதாகவும் ஜிபு, சிஜோ ஆகியோரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை மீட்டனர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவை சேர்ந்த ஜிபு மற்றும் சிஜோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் கடந்த 1½ வருடமாக இந்த பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிபு மற்றும் சிஜோவை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களையும் மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ×