செய்திகள்
கரூர் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் பிரம்ம தீர்த்தம்ரோடு பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகள் திவ்யபாரதி (வயது 23). கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் பிரம்ம தீர்த்தம்ரோடு பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகள் திவ்யபாரதி (வயது 23). கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.