செய்திகள்
கைது

திண்டுக்கல் அருகே சூதாட்ட கும்பல் கைது - பணம் பறிமுதல்

Published On 2020-06-01 11:09 GMT   |   Update On 2020-06-01 11:09 GMT
திண்டுக்கல் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே ஆத்தூர் பிரிவு பகுதியில் உள்ள தோட்டத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக செம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது தோட்டத்தில் சூதாடிய கும்பலை மடக்கி பிடித்தனர். மரக்காயர், சாகுல் ஹமீது, ஜெய்லானி, கார் முகமது, ஹக்கீம், முகமது ஆரீப், பரக்கத்துல்லா, அபுதாஹீர் ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News