செய்திகள்
ஆரல்வாய்மொழியில் கார் மோதி முதியவர் பலி
ஆரல்வாய்மொழியில் கார் மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி மருத்துவர் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 63). இவர் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சியாமளா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஊரடங்கால் 2 மாதம் வேலையில்லாமல் இருந்து வந்த அவர், நேற்று மதியம் விசுவாசபுரம் பகுதியிலுள்ள ஒரு கடையில் வேலை கேட்டு விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மோகன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி மருத்துவர் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 63). இவர் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சியாமளா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஊரடங்கால் 2 மாதம் வேலையில்லாமல் இருந்து வந்த அவர், நேற்று மதியம் விசுவாசபுரம் பகுதியிலுள்ள ஒரு கடையில் வேலை கேட்டு விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மோகன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.