செய்திகள்
துவாக்குடி அருகே புரோட்டா மாஸ்டர் தற்கொலை
துவாக்குடி அருகே புரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவாக்குடி:
காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). புரோட்டா மாஸ்டர். இவருடைய மனைவி தீபா. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் தீபா கோபித்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மனைவியை பிரிந்த ஏக்கத்தில், இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.