செய்திகள்
பிசிஆர் கருவி

தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வருகை- பரிசோதனையை விரைவுபடுத்த திட்டம்

Published On 2020-05-26 03:32 GMT   |   Update On 2020-05-26 03:32 GMT
கொரோனா வைரஸ் பரிசோதனையை மேலும் விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக, மேலும் 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பிசிஆர் கருவிகள் குறைவாக இருந்ததால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து புதிய கருவிகள் வாங்கப்பட்டு பரிசோதனை விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

தெற்கொரிய நிறுவனத்திடம் இருந்து கடந்த 17-ம் தேதி 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்த நிலையில், இன்று மேலும் 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. இந்த கருவிகளை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, கொரோனா பரிசோதனையை மேலும் விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News