செய்திகள்
விபத்து பலி

ராசிபுரம் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2020-05-25 09:31 GMT   |   Update On 2020-05-25 09:31 GMT
ராசிபுரம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 23). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு பட்டணம் முனியப்பம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அவருடன் அவரது நண்பர் சதீஸ் (25) என்பவரும் சென்றார். அப்போது அய்யம்பாளையம் என்ற பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒருவரின் வீட்டு கழிவறை சுவற்றில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சதீஸ் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சதீசை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பலியான அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் கோனேரிப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News